முதல் குழந்தை பிறந்தால் ரூபாய் 6,000 நிதியுதவி!- மத்திய அரசு அறிவிப்பு

'முதல் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு, ரூபாய் 6,000 வழங்கப்படும்' என மத்திய அரசு அறிவித்துள்ளது.

குழந்தை


மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.  அதில், பல்வேறு நலத்திட்டங்களுக்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, அசாமில் இந்திய வேளாண் கழகம் அமைப்பதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, 587 ஏக்கர் நிலம் மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் முதல் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு ரூபாய் 6,000 நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url