Type Here to Get Search Results !

ஐபிஎல் ஏலத்திற்கு டோனி வந்தால் அவரை வாங்க எனது பைஜாமாவை கூட விற்கத் தயார்

ஐபிஎல் ஏலத்திற்கு டோனி வந்தால் அவரை வாங்க தனது பைஜாமாவை கூட விற்கத் தயார் என்று பாலிவுட் நடிகரும், கொல்கத்தா அணி உரிமையாளருமான ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.



டோனி, விராட் கோலி ஆகியோர் அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் வருவார்கள். என்ன விலை கொடுத்தாவது அவர்களை ஏலத்தில் எடுக்க பலரும் தயாராகி வருகிறார்கள்.

கேப்டன் டோனி ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.இந்நிலையில் டோனியை கொல்கத்தா அணிக்காக வாங்க ஆசைப்படுகிறார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.

டோனியை வாங்க என் பைஜாமாவை கூட விற்கத் தயார். ஆனால் அதற்கு முதலில் டோனி ஏலத்தில் வர வேண்டுமே. அவர் ஏலத்தில் வருவது இல்லை என்று பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளருமான ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

”Yaar main toh usko apna Pyjama bech ke bhi kharid lun, wo aaye toh auction mein (I'm ready to sell my pyjama for buying MS Dhoni but that can happen only when he is available for auction right?)," Shahrukh Khan told Sporstwallah in an interview.”

தடை முடிந்து அடுத்த ஆண்டு களத்தில் குதிக்க உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் டோனியே வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad