தற்கொலையின் பின் அம்பலமான மைனாவின் சூழ்ச்சிகள்
நந்தினி சின்னத்திரையில் தன் கலகலப்பான பேச்சால் அனைவரையும் ரசிக்க வைப்பவர். ஆனால், அவர் வாழ்வில் பெரும் துயரம் ஒன்று நிகழ்ந்துவிட்டது. நந்தினியின் கணவர் விஷம் அருந்தி இறந்த செய்தி பலரையும் அதிர்ச்சியாக்கியது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அவரின் மரணத்திற்கு பிறகு கார்த்திக் அம்மா, நந்தினி மீது நிறைய குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அண்மையில் இவர் ஒரு பேட்டியில், கார்த்திக் நந்தினியை காதலித்த போது நடிகை என்று எங்களுக்குத் தெரியாது. திருமணத்திற்கு முன்பே எங்கள் வீட்டில் நந்தினி தங்கியிருக்கிறார். அப்போது அவர் அபார்ஷன் ஏற்பட்டதாக அவரே என்னிடம் சொல்லியுள்ளார். வெண்ணிலா என்ற பெண்ணுடன் கார்த்திக் பழகியது நந்தினிக்குத் தெரியும், வெண்ணிலா தற்கொலைக்கு நந்தினியும் ஒரு காரணம். என் மகனை மிரட்டித்தான் நந்தினி திருமணம் செய்துகொண்டார். கார்த்திக்கும், நந்தினிக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டுக்கு, தனியார் தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோதான் காரணம். அதில் கார்த்திக்குக்கு காலில் காயமடைந்த பிறகு, நந்தினியின் நடவடிக்கை மாறிவிட்டது என்றார்