Type Here to Get Search Results !

மண்ணிவாக்கம்: தனியார் பள்ளிகளுக்கு நிகராக, விளம்பரங்கள் அமைத்து, அரசு பள்ளிகளும் மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளன.

நடப்பு கல்வியாண்டு முடிய வுள்ள நிலையில், பெரும்பாலான தனியார் பள்ளிகளில், அடுத்த கல்வியாண்டுக்கான, மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை வழங்க துவங்கியுள்ளன.

இந்நிலையில், வண்டலுார் அடுத்த மண்ணிவாக்கம், வர்தமான் நகரில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஆங்காங்கே விளம்பர பேனர்கள் அமைத்து, மாணவர் சேர்க்கை துவங்கியிருப்பதாக தெரிய படுத்தி வருகிறது.

இதே போல், ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரியில் உள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், வீடு தோறும் சென்று விளம்பரம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு ஏற்ப, பல அதிநவீன வசதிகள், அரசு பள்ளிகளிலும் அமைந்திருப்பதால், பெற்றோரிடையேயும், அரசு பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க, ஆர்வம் எழுந்துள்ளதாக, பள்ளி குழுவினர் தெரிவிக்கின்றனர்.

என்ன சிறப்பு?

  • அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி நடைமுறையில் உள்ளது
  • பல பள்ளிகளில், கணிப்பொறி மற்றும் ’புரஜெக்டர்’ மூலம் கற்கும் வசதி உள்ளது
  • மதிய உணவு, விலையில்லா நோட்டு, புத்தகங்கள், சீருடை முதலியவை வழங்கப்படுகின்றன
  • தனியார் பள்ளிகளைப் போன்று, பலவித மறைமுக கட்டணங்கள் கிடையாது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad