Type Here to Get Search Results !

கடைசி ஓவர் பும்ராவிடம் கோஹ்லி என்ன சொன்னார் தெரியுமா




இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.  இதன் மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-1 என சமன் செய்துள்ளது.  இந்தப் போட்டியில் முதலில்  பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள்  மட்டுமே சேர்த்தது.  இதையடுத்து பேட்டிங் செய்த  இங்கிலாந்து அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள்  மட்டுமே எடுக்க முடிந்தது.  கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 8 ரன்கள்  தான் தேவை என்ற நிலையில், பும்ரா சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.  இது குறித்து பும்ரா கூறுகையில், நான் எந்த மாதிரி பந்தை வேண்டுமானாலும் வீசிக்கொள்ளலாம் என்ற சுதந்திரதத்தை அணித்தலைவர் கோஹ்லி அளித்தார்.  அவர் என் மீது வைத்த நம்பிக்கையே வென்றது. லென்த் பந்துகளையும், ஸ்லோ பந்துகளையும் அதிகம் பயன்படுத்தினேன். இது வெற்றியை ஈட்டித் தந்தது என்றார்.  அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், பும்ரா கடைசி ஓவரின் ஒவ்வொரு பந்திலும் என்னிடம் ஐடியா கேட்டபடி இருந்தார்.  நான் சிக்சர் போனாலும் பரவாயில்லை. உங்களுக்கு என்ன தோணுகிறதோ அதுபோல பந்துவீசுங்கள். அடுத்த போட்டியில் கற்றுக்கொள்ளலாம். உலகம் ஒன்றும் இத்தோடு முடிந்துவிடாது என்று அட்வைஸ் செய்திருந்தேன்.  கடைசி பந்தில் 6 ரன்கள்  தேவை என்றபோது ஆப்சைடில் ஓவர் பிட்ச் பந்தை வீசச்சொன்னேன். அப்படிப்பட்ட நிலையில் சிக்சர் போகாது, பவுண்டரி தான் போகும் நாம் வென்றுவிடலாம் என்று கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad