புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதி அனுஷ்கா சர்மா- விராட் கோலி திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக எழுந்துள்ள செய்திகளை மறுத்துள்ளார் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி. இது குறித்து அவர் தனது ட்விட்டரில், “திருமண நிச்சயதார்த்தம் இல்லை. அப்படி நிச்சயதார்த்தம் நடந்தால் அதனை நாங்கள் மறைக்க மாட்டோம். செய்திகள் தவறனா வதந்திகளைப் பரப்பி குழப்பங்களை உருவாக்குவதால் நாங்கள் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறோம்” என்று பதிவிட்டுள்ளார். அனுஷ்கா சர்மா, கோலி இருவரும் ரிஷிகேஷில் இருப்பதால் ஜனவரி 1-ம் தேதி பெரிய நட்சத்திரங்கள் பங்கேற்புடன் ரிஷிகேஷ் நரேந்திராந்கரில் இருவரது திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக செய்திகள் எழுந்தன. மேலும் அமிதாப் பச்சன், ஜெயாபச்சன், தொழிலதிபர் அனில் அம்பானி ஆகியோரும் நரேந்திராநகருக்கு வருகை தந்ததால் கோலி-அனுஷ்கா சர்மா குறித்த வதந்திகள் மேலும் உயிர்பெற்றன. ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள பாத்ரி பகுதியில் அம்புவாலா கிராமத்தில் உள்ள ஆஸ்ரமத்திற்குச் சென்று விராட் கோலி, அனுஷ்கா சர்மா வழிபாடு நடத்தியதாகத் தெரிகிறது.
அனுஷ்கா சர்மாவுடன் திருமண நிச்சயதார்த்தம் இல்லை கோலி முற்றுப்புள்ளி
December 31, 2016
0
புத்தாண்டு தினமான ஜனவரி 1-ம் தேதி அனுஷ்கா சர்மா- விராட் கோலி திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக எழுந்துள்ள செய்திகளை மறுத்துள்ளார் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி. இது குறித்து அவர் தனது ட்விட்டரில், “திருமண நிச்சயதார்த்தம் இல்லை. அப்படி நிச்சயதார்த்தம் நடந்தால் அதனை நாங்கள் மறைக்க மாட்டோம். செய்திகள் தவறனா வதந்திகளைப் பரப்பி குழப்பங்களை உருவாக்குவதால் நாங்கள் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறோம்” என்று பதிவிட்டுள்ளார். அனுஷ்கா சர்மா, கோலி இருவரும் ரிஷிகேஷில் இருப்பதால் ஜனவரி 1-ம் தேதி பெரிய நட்சத்திரங்கள் பங்கேற்புடன் ரிஷிகேஷ் நரேந்திராந்கரில் இருவரது திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக செய்திகள் எழுந்தன. மேலும் அமிதாப் பச்சன், ஜெயாபச்சன், தொழிலதிபர் அனில் அம்பானி ஆகியோரும் நரேந்திராநகருக்கு வருகை தந்ததால் கோலி-அனுஷ்கா சர்மா குறித்த வதந்திகள் மேலும் உயிர்பெற்றன. ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள பாத்ரி பகுதியில் அம்புவாலா கிராமத்தில் உள்ள ஆஸ்ரமத்திற்குச் சென்று விராட் கோலி, அனுஷ்கா சர்மா வழிபாடு நடத்தியதாகத் தெரிகிறது.
Post a Comment
0 Comments