Type Here to Get Search Results !

ரகசியமாய் மதனை சந்தித்த பிரபலங்கள்… நடுக்கத்தில் சினிமா பிரபலங்கள்





ஏன் இவரை நாம் அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை என்று பீல் பண்ணுபவர்கள் மத்தியில்…ஏண்டா…இவர் நமக்கு அறிமுகம் ஆனார்? என்று சில சமயங்களில் சிலருக்கு தோணும். அப்படி ஒரு நபராக ஒரு சிலருக்கு மாறிப்போன மதன்…போலீசார் வசம் மாட்டியதிலிருந்தே டென்ஷனாகி போனார்கள்.  எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கையில் சில சினிமா பிரபலங்களுக்கும் தொடர்பு உள்ளது என்று மதன் சொன்னதும் போலீசார் அந்த பிரபலங்களுக்கு சம்மன் அனுப்ப ஆரம்பித்து உள்ளனர்.  முதல்கட்டமாக, அம்மா கிரியேஷன்ஸ் சிவா மற்றும் வேந்தர் மூவிஸ் பாலகுரு போலீசுக்கு சம்மன் அனுப்பி,விசாரணைக்கு கூப்பிட்டனர்.மதன் முன் அமரவைத்து கேள்விகள்…தனித்தனியாக கேள்விகள் என்று விசாரிக்கப்பட்டுள்ளது.மோசடி உறுதியானால்…இவர்களும் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.  அது மட்டும் இன்றி மதன் திருப்பூரில் இருந்தபோது…ரகசியமாக சந்தித்த சினிமா பிரபலங்களுக்கு ஏன் ரகசியமாக சந்தித்தீர்கள்? என்று விசாரிக்க சம்மன் அனுப்ப போகிறார்கள்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad