இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மொஹாலியில் நடைபெற்று வந்த 3-வது டெஸ்ட் போட்டியை இந்தியா வென்றுள்ளது. இந்தியா, 103 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆட்டத்தின் 4-வது நாளில் 21 ஓவர்களுக்குள் எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 236 ரன்களுக்கு 2-வது இன்னிங்ஸை முடித்த இங்கிலாந்து அணி, ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையில் பந்துவீச்சைத் தொடங்கியது. குறைந்த இலக்கே இருப்பதால் கண்டிப்பாக விக்கெட் இழப்பின்றி வெற்றி பெறவே இந்தியா விரும்பியிருக்கும். ஆனால் துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய், வோக்ஸ் வீசிய இன்னிங்ஸின் 2-வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அடுத்து புஜாரா களத்தில் இருக்கும் பார்த்திவ் படேலுடன் இணைந்தார். எதிர்பார்த்ததை விட இந்த இணை வேகமாக ரன் குவிக்க ஆரம்பித்தது. குறிப்பாக படேல் ஓவருக்கு ஒரு பவுண்டரி என விளாசினார். சிறப்பாக ஆடிய படேல் 39 பந்துகளில் 1 சிக்ஸர் 8 பவுண்டரிகளுடன் அரை சதம் எட்டினார். ஓவருக்கு சராசரியாக 5 ரன்களுக்கு குறையாமல் வர, வெற்றிக்கு 15 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் புஜாரா 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து கோலி களமிறங்க அடுத்த 2 ஓவர்களில் இந்தியா வெற்றி இலக்கை அடைந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. பார்த்தீவ் படேல் 67 ரன்களுடனும், கோலி 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
3-வது டெஸ்டை வென்றது இந்தியா
November 30, 2016
0
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மொஹாலியில் நடைபெற்று வந்த 3-வது டெஸ்ட் போட்டியை இந்தியா வென்றுள்ளது. இந்தியா, 103 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆட்டத்தின் 4-வது நாளில் 21 ஓவர்களுக்குள் எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 236 ரன்களுக்கு 2-வது இன்னிங்ஸை முடித்த இங்கிலாந்து அணி, ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையில் பந்துவீச்சைத் தொடங்கியது. குறைந்த இலக்கே இருப்பதால் கண்டிப்பாக விக்கெட் இழப்பின்றி வெற்றி பெறவே இந்தியா விரும்பியிருக்கும். ஆனால் துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய், வோக்ஸ் வீசிய இன்னிங்ஸின் 2-வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அடுத்து புஜாரா களத்தில் இருக்கும் பார்த்திவ் படேலுடன் இணைந்தார். எதிர்பார்த்ததை விட இந்த இணை வேகமாக ரன் குவிக்க ஆரம்பித்தது. குறிப்பாக படேல் ஓவருக்கு ஒரு பவுண்டரி என விளாசினார். சிறப்பாக ஆடிய படேல் 39 பந்துகளில் 1 சிக்ஸர் 8 பவுண்டரிகளுடன் அரை சதம் எட்டினார். ஓவருக்கு சராசரியாக 5 ரன்களுக்கு குறையாமல் வர, வெற்றிக்கு 15 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் புஜாரா 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து கோலி களமிறங்க அடுத்த 2 ஓவர்களில் இந்தியா வெற்றி இலக்கை அடைந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. பார்த்தீவ் படேல் 67 ரன்களுடனும், கோலி 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
Post a Comment
0 Comments