மழைக் காலங்கள் தொடங்கி விட்டால் போதும், நம் வீட்டில் கொசுக்களின் தொல்லையை தாங்கிக் கொள்ளவே முடியாது. இதனால் நாம் கொசு விரட்டி திரவத்தை கடையில் வாங்கி மின்சாரத்தில் சொருகி வைத்து கொசுக்களை விரட்டுகிறோம். இதனை நாம் சுவாசிக்கும் போது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே ரசாயனப் பொருட்கள் கலந்த கொசு விரட்டி மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கையான முறையில் நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் தயாரிக்கலாம்.
இயற்கை முறையில் கொசு விரட்டி மருந்து தயாரிப்பது எப்படி?
கொசு விரட்டி திரவம் இருந்த பாட்டிலை ஒருமுறை கடைகளில் வாங்கி பின் அந்த மருந்து தீர்ந்ததும் அந்த பாட்டிலை தூக்கி எறியாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த பாட்டிலில் சிறிதளவு ஆரத்தி கற்பூரத் துண்டுகளையும், வேப்ப எண்ணையையும் கலந்து, இந்த மருந்தை இயற்கையான முறையில் கொசு விரட்டி மருந்தாக நம் வீட்டில் பயன்படுத்தலாம். இந்த இயற்கை கொசு விரட்டி மருந்தை நம் வீட்டில் பயன்படுத்துவதால், நமது உடல் நலம் மற்றும் சுவாசத்திற்கு எந்தவொரு தீங்கையும் ஏற்படுத்தாது
Post a Comment
0 Comments