Type Here to Get Search Results !

டிஎன்பிஎல் தொடர்: களத்தில் குதித்தார் அஸ்வின்







டிஎன்பிஎல் தொடரில் நேற்று முன்தினம் நத்தத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மதுரை - திருவள்ளூர் அணிகள் மோதின. இதில் 6 ரன்கள் வித்தியாசத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணி வெற்றி பெற்றது.  முதலில் பேட் செய்த திருவள்ளூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. 144 ரன்கள் இலக்குடன் விளையாடி மதுரை அணியால்20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக சுரேஷ் குமார் 22 ரன்கள் எடுத்தார். திருவள்ளூர் அணி தரப்பில் ரோஹித் 3 விக்கெட்கள் கைப்பற் றினார்.

அஸ்வின்

தொடரின் 7-ம் நாளான நேற்று திண்டுக்கல் டிராகன்ஸ்-காஞ்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையில் திண்டுக்கல் அணி களமிறங்கியது. முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.  ஜெகதீசன் 44, கங்கா தர் ராஜூ 32, சுப்பிரமணிய சிவா 23 ரன்கள் எடுத்தனர். அஸ்வின் ஒரு சிக்ஸருடன் 9 ன்னும், குரு கேதர்நாத் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். காஞ்சி அணி தரப்பில் ஜெசுராஜ், பார்த்திபன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காஞ்சி அணி பேட் செய்ய தொடங்கியது.

இன்றைய ஆட்டம்

தொடரின் 8-ம் நாளான இன்று சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 6.30 மணிக்கு நடை பெறும் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ்- தூத்துக்குடி பேட்ரி யாட்ஸ் அணிகள் மோதுகின்றன



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad