நடிகை லட்சுமிமேனன் கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் பாசானார். உடனே கொச்சி தவேரா பகுதியில் உள்ள சீக்ரட் ஹார்ட் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார், பிளஸ் 2வில் ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண் பெற்ற லட்சுமிமேனன் கம்யூனிகேட்டிங் இங்கிலீஸ் சப்ஜெக்ட் எடுத்து படித்தார். கல்லூரியில் சேர்ந்த புதிதில் “எனக்கு நடிப்பை விட படிப்புதான் முக்கியம் என்று பேட்டியெல்லாம் கொடுத்தார். அப்போது சில படங்களையும் தவிர்த்தார் சில மாதங்கள் கல்லூரிக்கு போன நிலையில் மீண்டும் தீவிரமாக நடிக்க ஆரம்பித்தார். இதனால் கல்லூரிக்கு அடிக்கடி லீவு போட்டார். கல்லூரி நிர்வாகம் பெற்றோரை அழைத்து எச்சரிக்கை செய்தது. அடிக்கடி லீவுபோட்டால் கல்லூரியில் இருந்து நீக்குவோம் என்று கூறியது. முதல் செமஸ்டரை எழுதிய நிலையில் அடுத்த செமஸ்டருக்கு போதிய வருகை பதிவு இல்லை என்று கூறி கல்லூரி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதி தரவில்லை. எந்த நேரமும் கல்லூரியிலிருந்து நீக்கப்படலாம் என்ற நிலையில் லட்சுமிமேனன் தானாகவே கல்லூரியிலிருந்து விலகிக் கொண்டார். தற்போது தபால் மூலம் படிப்பை தொடர முடிவு செய்திருக்கிறார்
கல்லூரிக்கு முழுக்கு போட்டார் லட்சுமி மேனன்
June 01, 2016
0
நடிகை லட்சுமிமேனன் கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் பாசானார். உடனே கொச்சி தவேரா பகுதியில் உள்ள சீக்ரட் ஹார்ட் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார், பிளஸ் 2வில் ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண் பெற்ற லட்சுமிமேனன் கம்யூனிகேட்டிங் இங்கிலீஸ் சப்ஜெக்ட் எடுத்து படித்தார். கல்லூரியில் சேர்ந்த புதிதில் “எனக்கு நடிப்பை விட படிப்புதான் முக்கியம் என்று பேட்டியெல்லாம் கொடுத்தார். அப்போது சில படங்களையும் தவிர்த்தார் சில மாதங்கள் கல்லூரிக்கு போன நிலையில் மீண்டும் தீவிரமாக நடிக்க ஆரம்பித்தார். இதனால் கல்லூரிக்கு அடிக்கடி லீவு போட்டார். கல்லூரி நிர்வாகம் பெற்றோரை அழைத்து எச்சரிக்கை செய்தது. அடிக்கடி லீவுபோட்டால் கல்லூரியில் இருந்து நீக்குவோம் என்று கூறியது. முதல் செமஸ்டரை எழுதிய நிலையில் அடுத்த செமஸ்டருக்கு போதிய வருகை பதிவு இல்லை என்று கூறி கல்லூரி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதி தரவில்லை. எந்த நேரமும் கல்லூரியிலிருந்து நீக்கப்படலாம் என்ற நிலையில் லட்சுமிமேனன் தானாகவே கல்லூரியிலிருந்து விலகிக் கொண்டார். தற்போது தபால் மூலம் படிப்பை தொடர முடிவு செய்திருக்கிறார்
Tags
Post a Comment
0 Comments