Type Here to Get Search Results !

ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படப்பிடிப்பு தொடங்கியது





அதர்வா, சூரி நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படம் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஓடம் இளவரசு இயக்கவிருக்கிறார். இப்படத்தின் கதாநாயகியாக ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘ராஜதந்திரம்’ ஆகிய படங்களில் நடித்த ரெஜினா நடிக்கவிருக்கிறார்.  இப்படத்தில் அதர்வாவுக்கு பதிலாக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது கலையரசன்தான். ஆனால், ஒருசில காரணங்களால் கலையரசனை நீக்கிவிட்டு அதர்வாவை இப்படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர். இப்படம் தொடங்குவதற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது.  இதையடுத்து, இன்று இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். மதுரையில் மீனாட்சியம்மன் கோவில் முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தில் இரண்டு ஹீரோயின் நடிப்பதால் மற்றொரு கதாநாயகியை தேடி வருகின்றனர். மேலும், இப்படத்தை பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad