Type Here to Get Search Results !

கோஹ்லி- ஜான்சன் மோதலை ஏன் தடுக்கவில்லை ரஹானே விளக்கம்




இந்திய டெஸ்ட் அணியின் துணைத் தலைவர் ரஹானே, இந்திய நட்சத்திர வீரர் கோஹ்லிக்கும், ஆஸ்திரேலிய  முன்னணி பந்துவீச்சாளரான மிட்செல் ஜான்சனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தடுக்காமல் இருந்ததற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.  கடந்த 2014-15ம்ஆண்டு இந்தியா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது.  மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் கோஹ்லியை வம்புக்கு இழுத்தார். துணிச்சலான கோஹ்லி அவருக்கு பதிலடி கொடுக்க இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.  சம்பவத்தின் போது கோஹ்லியுடன் களத்திலிருந்த ரஹானே சமீபத்தில் பங்கேற்ற ஒரு நேர்காணலின் போது நடந்த உண்மையை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது,

களத்தில் கோஹ்லி விளையாடும் போது எதிர்திசையில் நான் இருந்தேன். ஜான்சன் அவரை வம்புக்கு இழுத்ததையடுத்து, கோஹ்லியை அமைதிபடுத்த நான் எண்ணினேன்.  ஆனால் ஜான்சன் அதை விரும்பவில்லை, இதுகுறித்து அவர் கோஹ்லியுடன் பேச வேண்டும் என நான் எண்ணினேன். அதனால் தான் கோஹ்லியை நான் அமைதிபடுத்தவில்லை என கூறியுள்ளார்.  மேலும் அவர் கூறுகையில், ஆஸ்திரேலியாவுக்கு நாங்கள் விளையாட மட்டும் போகவில்லை, அவர்கள் மேலும் மேலும் எங்களை தாழ்த்துவதின் மூலமே நாங்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும் என கூறியுள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad