Type Here to Get Search Results !

தோனி , ரெய்னாவை திருமணத்திற்கு அழைக்காத ஜடேஜா




இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா தன்னுடைய திருமணத்திற்கு சக வீரர்களான தோனி , ரெய்னாவை அழைக்காததற்கு காரணம் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான ஜடேஜாவுக்கும், ரீவா சொலான்கி என்பவருக்கும் கடந்த பெப்ரவரி மாதம் 5ம் தேதி  நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனையடுத்து எதிர்வரும் 17ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது.  இந்நிலையில் தனது திருமணத்திற்காக உறவினர் அனைவருக்கும் ஜடேஜா பத்திரிக்கை வைத்து அழைப்பு விடுத்து வருகிறார். ஆனால் சக வீரர்களான சுரேஷ் ரெய்னா, தோனியை அழைக்கவில்லையாம்.  நெருங்கிய நண்பராக உள்ள தோனி , ரெய்னாவை அவர் தனது திருமணத்திற்கு ஏன் அழைக்கவில்லை என்று அனைவரும் வியக்கையில் இதற்கு ஜடேஜா ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.  இது தொடர்பாக ஜடேஜா கூறுகையில், "டோனியும், ரெய்னாவும் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள்.  நான் அவர்களுக்கு பத்திரிக்கை வைத்து தான் அழைக்க வேண்டும் என்றில்லை. அவர்களாகவே எனது திருமணத்திற்கு நிச்சயம் வருவார்கள்" என்று கூறியுள்ளார்.  தோனி , ரெய்னா, ஜடேஜா ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்து விளையாடியவர்கள்.  தற்போது தோனி  ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காகவும், ஜடேஜாவும், ரெய்னாவும் குஜராத் லயன்ஸ் அணிக்காகவும் விளையாடுகின்றனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad