Type Here to Get Search Results !

முதல் நாளில் 10 கோடி வசூலித்த ஜங்கிள் புக்




கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த ஹாலிவுட் படம் ஜங்கிள் புக். உலகம் முழுவதும் வருகிற 16ந் தேதி வெளியாகிறது.  இந்தியாவில் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. பிரபல நடிகர் நடிகைகள் டப்பிங் பேசியுள்ளனர். காட்டுக்குள் தனித்து விடப்பட்ட ஒரு சிறுவனை அங்கு வாழும் விலங்குகள் எப்படி காப்பாற்றி வளர்க்கின்றன என்பதுதான் கதை. இந்திய கதையான இது ஹாலிவுட்டில் பல பாகங்களாக வெளிவந்துள்ளது. தற்போது வந்துள்ள பாகத்தில் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதாதல் கனவில்கூட காண முடியாத காட்சிகளுடன் படம் வெளியாகி பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 3டி தொழில்நுட்பத்திலும் வெளியாகியுள்ளது. கதையின் நாயகனான மோக்லி கேரக்டரில் இந்திய சிறுவன் நீல் சேத்தி நடித்திருப்பதால் எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. தற்போது விடுமுறை காலம் என்பதால் மக்கள் குடும்பம் குடும்பமாக படத்தை பார்க்கச் செல்கிறார்கள். அதனால் படம் வசூலை வாரிக்கு குவித்துக் கொண்டிருக்கிறது. வெளியான முதல் நாள் மட்டும் இந்தியாவில் சுமார் ரூ.10 கோடியை வசூலித்துள்ளது. தமிழில் முதல் நாள் வசூல் 2 கோடி. இரண்டு வாரங்களுக்கு முன்பதிவு முடிந்து விட்டது, அதுவும் 3டி தியேட்டர்களில் மே இறுதி வரை புக்கிங் முடிந்திருக்கிறது. ஹாலிவுட் படங்களின் இதுவரையிலான வசூல் சாதனையை ஜங்கிள் புக் முறியடிக்கும் என்கிறார்கள்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad