ரஷியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா ஊக்க மருந்து பயன்படுத்தியது அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் அவர் மெல்டோனியம் எனும் ஊக்க மருந்தை பயன்படுத்தியது சோதனையில் நிரூபணமாகி உள்ளது. இதை தொடர்ந்து ஷரபோவா விளையாட இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊக்க மருந்து பயன்படுத்தியதால் டென்னிஸில் ஷரபோவா பெற்ற அனைத்து வகை பட்டங்களை பறிக்க வேண்டும் என்றும் முன்னாள் வீராங்கனை ஜெனீபர் கேப்ரியாட்டி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:– ஷரபோவா ஊக்க மருந்தில் சிக்கியது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இருதய நோயில் வேகமாக குணமடைய இந்த வகையான மருந்தை உட்கொண்டதாக கூறப்படுவதை ஏற்க இயலாது. அவர் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். டென்னிஸ் போட்டியில் அவர் வெற்றி பெற்ற அனைத்து பட்டங்களையும் பறிக்க வேண்டும் என்பது தான் எனது கருத்தாகும். அப்போது தான் மற்றவர்கள் சரியாக விளையாடுவார்கள். இவ்வாறு ஜெனீபர் கேப்ரியாட்டி கூறியுள்ளார்.
ஷரபோவாவின் வெற்றி பட்டங்களை பறிக்க வேண்டும் முன்னால் வீராங்கனை போர்க்கொடி
March 09, 2016
0
ரஷியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா ஊக்க மருந்து பயன்படுத்தியது அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் அவர் மெல்டோனியம் எனும் ஊக்க மருந்தை பயன்படுத்தியது சோதனையில் நிரூபணமாகி உள்ளது. இதை தொடர்ந்து ஷரபோவா விளையாட இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊக்க மருந்து பயன்படுத்தியதால் டென்னிஸில் ஷரபோவா பெற்ற அனைத்து வகை பட்டங்களை பறிக்க வேண்டும் என்றும் முன்னாள் வீராங்கனை ஜெனீபர் கேப்ரியாட்டி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:– ஷரபோவா ஊக்க மருந்தில் சிக்கியது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இருதய நோயில் வேகமாக குணமடைய இந்த வகையான மருந்தை உட்கொண்டதாக கூறப்படுவதை ஏற்க இயலாது. அவர் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். டென்னிஸ் போட்டியில் அவர் வெற்றி பெற்ற அனைத்து பட்டங்களையும் பறிக்க வேண்டும் என்பது தான் எனது கருத்தாகும். அப்போது தான் மற்றவர்கள் சரியாக விளையாடுவார்கள். இவ்வாறு ஜெனீபர் கேப்ரியாட்டி கூறியுள்ளார்.
Tags
Post a Comment
0 Comments