லிங்கா பட பிரச்சனைகள் எப்போது முடியும் என்றே தெரியவில்லை. கதைத் திருட்டு தொடர்பாக மதுரை மாவட்ட கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது லிங்கா திரைப்படக் குழுத் தரப்பில் படத்தின் கதையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், லிங்கா பட தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான வக்கீல் லிங்கா திரைப்படக் கதையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்ளிட்டோரிடம் கையெழுத்துப் பெற வேண்டி உள்ளது.அவர்கள், தற்போது படப்பிடிப்பு தொடர்பாக வெளியூர்களில் இருப்பதால் கையெழுத்துப் பெற முடியவில்லை. எனவே, கூடுதலாக ஒரு நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
கதை திருட்டு அவகாசம் கேட்கும் லிங்கா படக்குழு
March 11, 2016
0
லிங்கா பட பிரச்சனைகள் எப்போது முடியும் என்றே தெரியவில்லை. கதைத் திருட்டு தொடர்பாக மதுரை மாவட்ட கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது லிங்கா திரைப்படக் குழுத் தரப்பில் படத்தின் கதையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், லிங்கா பட தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான வக்கீல் லிங்கா திரைப்படக் கதையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்ளிட்டோரிடம் கையெழுத்துப் பெற வேண்டி உள்ளது.அவர்கள், தற்போது படப்பிடிப்பு தொடர்பாக வெளியூர்களில் இருப்பதால் கையெழுத்துப் பெற முடியவில்லை. எனவே, கூடுதலாக ஒரு நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
Tags
Post a Comment
0 Comments