Type Here to Get Search Results !

பீட்டர்சனை சீண்டும் மோர்கன்

.


இங்கிலாந்து அணிக்கு பீட்டர்சன் திரும்புவதற்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டதாக அந்த அணியின் தலைவர் மோர்கன் கூறியுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரான பீட்டர்சன் மீண்டும் அணிக்கு திரும்ப போராடி வருகிறார்.  கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவருக்கு இடம் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்.  ஆனால் பீட்டர்சனை அணியில் இணைத்துக் கொள்ள முடியாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  இந்நிலையில் பீட்டர்சன் பல்வேறு நாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.  சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ராம் ஸ்லாம் லீக் டி20 தொடரில் 7 போட்டிகளில் 401 ரன்களில் குவித்து முத்திரை பதித்தார். அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் நடந்த பிக் பாஷ் தொடரிலும் அசத்தினார்.  இதனால் டி20 உலகக்கோப்பைத்  தொடருக்கான இங்கிலாந்து அணியில் பீட்டர்சனை சேர்க்க கிரிக்கெட் வாரியம் பரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.  இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் டி20 தலைவரான மோர்கன் கூறுகையில், ”கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணிக்கு திரும்ப முடியாது. அவருக்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டது.  அவர் அணியில் தேர்வு  செய்யப்படமாட்டார் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து” என்று கூறியுள்ளார்.  இதற்கு டுவிட்டரில் பதலளித்த பீட்டர்சன், என்னை பற்றி மோர்கன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்திருப்பது சுவாரஸ்யமாக உள்ளது என்று கூறியுள்ளார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad