Type Here to Get Search Results !

உலகின் சிறந்த 'ஸ்பின்னர்': அஸ்வினை புகழ்ந்து தள்ளும் கோஹ்லி




அஸ்வின் உலக தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளராக உள்ளார் என்று அணித்தலைவர் கோஹ்லி பாராட்டு தெரிவித்துள்ளார். இலங்கை தொடரில் அசத்திய அஸ்வின் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.  தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அசத்தி வரும் அஸ்வின் விக்கெட் வேட்டை நடத்தி வருகிறார்.  நாக்பூரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின் இந்திய அணி வெற்றி பெற உதவியாய் இருந்தார். அவர் ஆட்டநாயகனாகவும் தேர்வு  செய்யப்பட்டார்.  இது பற்றி அணித்தலைவர் கோஹ்லி கூறுகையில், "அஸ்வின் உலகதரம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர். வெற்றிக்கு நல்ல ஒரு வழியை அமைத்துக் கொடுத்தார். தற்போது அவர் தான் சிறந்த சுழற்பந்துவீச்சாளராக இருக்கிறார்.  டெஸ்ட் போட்டியில் சிறந்த தருணத்திற்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும். அந்த வகையில் மிஸ்ரா நல்ல சமயத்தில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அந்த விக்கெட்டுகள் சவாலானது என்று நினைக்கிறேன்.  பேட்டிங்  வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். தொடரை முழுமையாக கைப்பற்றுவது என்பது முக்கியமான ஒன்று. அந்த வகையில் டெல்லி போட்டியும் கைகொடுக்கும் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad