Type Here to Get Search Results !

சூர்யா நடிக்கும் 24 படத்தின் தற்போதைய நிலை என்ன







சூர்யா, சமந்தா நடிப்பில் உருவாகிவரும் படம் 24. விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டதை சூர்யா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அலை, யாவரும் நலம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்ரம் குமார். தொடர்ந்து இவர் தெலுங்கில் எடுத்த மனம் படத்தில் நாகார்ஜூனா, அவரது தந்தை நாகேஸ்வரராவ் மற்றும் அவருடைய மகன் நாக சைதன்யா ஆகிய மூவரும் நடித்திருந்தார்கள். இப்படம் பெரும் வசூல் சாதனையையும், வெற்றியையும் பெற்றது.அதைத் தொடர்ந்து தமிழில் இவர் இயக்கும் படமே 24. க்ரைம், த்ரில்லர் கதையாக உருவாகிவரும் இப்படத்தில் சூர்யா வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளாராம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சூர்யா மூன்று வேடத்தில் நடித்திருப்பதாகவும், அதில் ஒரு சூர்யா வில்லன் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.  இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்ததை அடுத்து, மகிழ்ச்சியை சூர்யா அவரின் ட்விட்டர் பக்கத்தில் கூறினார். மேலும் 24 மொத்த டீமுக்கும் நன்றியையும் சூர்யா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad