பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தவுள்ள சூப்பர் லீக் டி20 தொடருக்கு இந்திய வீரர்களை அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும் என ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். தொடர் போன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பி.எஸ்.எல். எனப்படும் 20 ஓவர் போட்டி தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் இந்திய வீரர்களும் இடம் பெற வேண்டும் என்று பி.எஸ்.எல். தலைவர் நஜம் சேத்தி விருப்பம் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு துவக்கத்தில் கத்தார் தலைநகர் டோகாவில் நடத்த திட்டமிட்டுள்ள இந்த தொடரில் பல நாட்டு வீரர்கள் கலந்துகொண்டு ஆடவுள்ளனர். இதன் ஒருபகுதியாக வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்ய அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சுமார் 80 வெளிநாட்டு வீரர்களை சேர்க்க திட்டமிட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லை அணுகியுள்ளது. இந்த தொடரில் இந்திய வீரர்கள் கலந்துகொள்வது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவேதும் எடுக்காத நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டால் இந்திய வீரர்களுக்கு அனுமதி தருவது குறித்து பரிசீலிக்கப்படும் என ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை பாகிஸ்தான் கிரிகெட் வாரியத்திடம் இருந்து முறைப்படி கோரிக்கை எதுவும் வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர்: இந்திய வீரர்களை அனுப்ப பரிசீலனை
November 27, 2015
0
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தவுள்ள சூப்பர் லீக் டி20 தொடருக்கு இந்திய வீரர்களை அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும் என ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். தொடர் போன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பி.எஸ்.எல். எனப்படும் 20 ஓவர் போட்டி தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் இந்திய வீரர்களும் இடம் பெற வேண்டும் என்று பி.எஸ்.எல். தலைவர் நஜம் சேத்தி விருப்பம் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு துவக்கத்தில் கத்தார் தலைநகர் டோகாவில் நடத்த திட்டமிட்டுள்ள இந்த தொடரில் பல நாட்டு வீரர்கள் கலந்துகொண்டு ஆடவுள்ளனர். இதன் ஒருபகுதியாக வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்ய அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சுமார் 80 வெளிநாட்டு வீரர்களை சேர்க்க திட்டமிட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லை அணுகியுள்ளது. இந்த தொடரில் இந்திய வீரர்கள் கலந்துகொள்வது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவேதும் எடுக்காத நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டால் இந்திய வீரர்களுக்கு அனுமதி தருவது குறித்து பரிசீலிக்கப்படும் என ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை பாகிஸ்தான் கிரிகெட் வாரியத்திடம் இருந்து முறைப்படி கோரிக்கை எதுவும் வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tags
Post a Comment
0 Comments