Type Here to Get Search Results !

இன்று வெளியாக இருந்த கத்துக்குட்டி படத்துக்கு நீதிமன்றம் தடை:












சென்னை: கத்துக்குட்டி திரைப் படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவிட்டுள்ளது.  நடிகர்கள் நரேன், சூரி, சுருதி உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கத்துக்குட்டி’. இந்த திரைப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி (இன்று) வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், இந்த படத்தை வெளியிட தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலா சாட்சி தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் அன்வர் கபீர் வழக்கு தொடர்ந்திருந்தார்.  அந்த வழக்கில், ''ஓன் புரொடக்சன்’ நிறுவனம் கத்துக்குட்டி என்ற படத்தை வெளியிட உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பு செலவு தொடர்பாக ‘ஓன் புரொடக்சன்’ நிறுவனத்தின் உரிமையாளர் ராம்குமார், எங்கள் நிறுவனத்துடன் கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்தார். இந்த ஒப்பந்தத்தின்படி பணத்தை எனக்கு தராமல், படத்தை வெளியிடுவதாக விளம்பரம் செய்துள்ளனர். எனவே, படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்" என்று கூறியிருந்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவி சந்திரபாபு, ''ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்க வேண்டிய பணத்தை ‘டெப்பாசிட்’ செய்துவிட்டால், படத்தை வெளியிடலாம். பணத்தை டெப்பாசிட் செய்யவில்லை என்றால், கத்துக்குட்டி படத்தை வெளியிடக் கூடாது. இந்த படத்தை வெளியிட 2 வாரத்துக்கு தடை விதிக்கின்றேன்" என்று உத்தரவிட்டுள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad