விஜய் டிவிக்கு வந்த சோதனை






சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, '' தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நான் பயன்படுத்திய 'என்னமா இப்படி பண்றீங்களேமா?' என்ற வார்த்தையை வைத்து விஜய் டி.வி. ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சி என்னை மிகவும் புண்படுத்தியது. என்னை இழிவுபடுத்தும் வகையில் இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். முதல் முறை என்பதால் விட்டு விட்டேன். இப்போது மீண்டும் என்னை புண்படுத்தும் வகையில் அதே நிகழ்ச்சியை நாளை ஒளிபரப்பவுள்ளதாக அறிவித்துள்ளார்கள். தொடர்ந்து என்னை இழிவுபடுத்தும் வகையில் ஒளிபரப்புவதை  அனுமதிக்க முடியாது. இதனை எதிர்கொள்ளும் சக்தியும் பொறுமையும் எனக்கு இல்லை. எனவே அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும்''  என கூறியுள்ளார்.   



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url