சந்தானத்தை கலாய்க்கும் சூரி





கோலிவுட்டில் தற்போது காமெடிக்கு போட்டி யார் யாருக்கு என்று கேட்டால் அது சந்தானம் மற்றும் சூரி தான் முதலில் வருவார்கள். சூரி நடிக்க வேண்டிய சில படங்கள் கூட சந்தானத்திற்கு சென்றது.இதனால் இவர்கள் இருவருக்கும் தொழில் போட்டி நடந்து கொண்டே இருக்கிறது. இது நாளடைவில் சந்தானத்திற்கு கதாநாயகன் ஆசை தொற்றிக் கொள்ள தற்போது முழுநேர கதாநாயகனாகவே மாறிவிட்டார்.இந்நிலையில் நரேன் நடித்த கத்துக்குட்டி படத்தில் படம் முழுவதும் முழு நேர காமெடியனாக கலக்கியுள்ளார் சூரி. இதில் நரேனின் தந்தை கதாபாத்திரத்திற்கு சந்தானம் என பெயர் வைத்துள்ளனர்.இத்திரைப்படத்தில் சந்தானம் கதாபாத்திரம் சூரியை பல முறை டென்சன் செய்ய, சந்தானம் எங்கிட்டேயேவா? இரு உன்னை கவனிச்சுக்கிறேன் என மறைமுகமாக சூரி கூற, இது சந்தானத்தை தாக்குவது போல் அமைந்துள்ளது



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url