Type Here to Get Search Results !

கபாலியில் பஞ்ச் வசனங்கள் இல்லை







கபாலி படத்தில் பஞ்ச் வசனங்கள் இல்லை. அவை கதைக்குத் தேவைப்படவில்லை என்று இயக்குநர் பா. இரஞ்சித் தெரிவித்துள்ளார்.  ரஜினி - இயக்குநர் பா. இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படம் - கபாலி. இந்தப் படத்தில் சென்னையைச் சேர்ந்த தாதா கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். ராதிகா ஆப்தே, தினேஷ், தன்ஷிகா, கலையரசன் ஆகியோரும் நடிக்கிறார்கள். தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.  கபாலி படம் தொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு இயக்குநர் பா. இரஞ்சித் அளித்த பேட்டியில் கூறியதாவது: மெட்ராஸ் போல கபாலி படத்திலும் நல்ல கருத்து உள்ளது. என்னுடைய எல்லாப் படங்களிலும் அது நிச்சயம் இருக்கும். என் படம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி விவாதத்தை உருவாக்கவேண்டும் என நினைக்கிறேன். முன்பு ரெளடிகள் மக்களுக்கும் சமூகத்துக்கும் நல்லது செய்வார்கள். கபாலியில் ரஜியின் கதாபாத்திரம் அதுபோன்ற ஒன்றுதான். முள்ளும் மலரும் காளி போல கபாலி பாத்திரம் இருக்கும்.  கபாலி படத்தில் பஞ்ச் வசனங்கள் கிடையாது. ஏனெனில் கபாலி என்பதே பஞ்ச் டயலாக்குக்கு நிகரானது. மேலும் கதையிலும் அதற்கான தேவையில்லை.
ரஜினியை அவரைப் போல காண்பிக்கவேண்டும் என விரும்பினேன். படத்துக்காக வெள்ளைத் தாடி வைக்கமுடியுமா என்று கேட்டேன். உடனே சம்மதித்தார். இதனால்தான் அவர் படத்துக்கு ஒப்புக்கொண்டார். அவர் வயதுக்கேற்ற, அவரைப் போன்ற, அவர் இயல்பான தோற்றத்துக்கு ஏற்ற படத்தில் நடிக்கவே அவர் விரும்பினார். இந்தப் படத்துக்காக அவருடைய எடையையும் குறைத்துள்ளார். ராதிகா ஆப்தே, கபாலியின் மனைவியாக நடிக்கிறார்.  இப்போது சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது. அடுத்த மாதம் மலேசியா செல்வோம். என் முதல் படமான அட்டக்கத்தியின்போது காலையில் 6.30 மணிக்கு படப்பிடிப்புக்குச் செல்வேன். 7 மணிக்கு முதல் ஷாட் வைப்பேன். கபாலிக்கும் அப்படியே செய்கிறேன். என் எல்லாப் படங்களுக்கும் இப்படித்தான் இருக்கும். நடிகர்களும் படப்பிடிப்புத் தளங்களும் மாறலாம், என் வேலையும் அர்ப்பணிப்பும் எப்போதும் ஒரேமாதிரித்தான் இருக்கும்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad