Type Here to Get Search Results !

டோனி, கோஹ்லி யாராக இருந்தால் என்ன..சூப்பராக விளையாடுவோம்: ரோஹித் சர்மா










டோனி, வீராட் கோஹ்லி இருவரின் அணித்தலைமைக்கு ஏற்றவாறு விளையாடுவதில் சிரமம் இல்லை என இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி டி20 கிரிக்கெட்டில் இந்தியா ஏ, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  நாளை இந்தியா- தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டியில் மோதுகின்றன.  இந்நிலையில் தோல்வியை வைத்து தென் ஆப்பிரிக்காவை நாம் எடைபோட கூடாது என இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் கூறுகையில், இந்தியா ஏ அணியுடன் நடந்தது  பயிற்சி ஆட்டம் என்பதால் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொள்வார்கள்.  எனவே தோல்வியை வைத்து அணியை எடைபோடுவது கடினம், டி20 மட்டுமின்றி அனைத்து போட்டிகளிலும் மிகவும் பலம் வாய்ந்த அணி தென் ஆப்பிரிக்கா.  எனினும் ஐபிஎல் கிரிக்கெட் அனுபவம் எங்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும்.  உலகக் கோப்பை  டி20 போட்டிகள் நடைபெறவுள்ளதால், இந்த போட்டியிலிருந்து எங்களது திறமையை நிரூபிப்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.  மேலும் உலகின் 5 முதல் தர கிரிக்கெட் மைதானங்களில் தரம்சலா மைதானமும் ஒன்று என்றே தான் கருதுவதாகவும், இந்த அழகான மைதானத்தில் விளையாடுவதே அருமை தான் எனவும் தெரிவித்துள்ளார். 




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad