Type Here to Get Search Results !

ரஞ்சிப் போட்டியில் விளாசல்: 9வது நபராக களமிறங்கி சதம் அடித்த உமேஷ் யாதவ்









ஒடிசா அணிக்கு எதிரான ரஞ்சி டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவின் அசத்தல் சதத்தால் விதர்பா அணி வலுவான நிலையில் உள்ளது. நேற்று முன் தினம் ஆரம்பமான ரஞ்சி டெஸ்ட் போட்டியில் நாக்பூரில் விதர்பா- ஒடிசா அணிகள் மோதி வருகின்றன.  விதர்பா அணி நாணய சுழற்சியில் வென்று பேட்டிங் செய்து  வருகிறது. இந்த அணியில் தொடக்க வீரர் ஷங்வார் (119) சதம் அடித்தார். இதனால் முதல் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள்  எடுத்திருந்தது.  இந்நிலையில் நேற்று தொடங்கிய 2வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் 9வது நபராக களமிறங்கி ஒடிசா அணியின் பந்து வீச்சை விளாசித் தள்ளினார்.  உமேஷ் யாதவ் 119 பந்தில் தலா 7 பவுண்டரிகள், சிக்சர்கள் என 128 ரன்கள்  குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் விதர்பா அணி முதல் இன்னிங்சில் 143.4 ஓவர்களில் 467 ரன்கள் எடுத்தது.  பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஒடிசா அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 79 ரன்கள் எடுத்திருந்தது. 




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad