Type Here to Get Search Results !

நடிகர் அமிதாப்பை 4 கி.மீட்டர் தூரம் விடாமல் துரத்திய புலி!!!


 பாலிவுட் நடிகர்  அமிதாப்பச்சனை கி.மீட்டர் தூரம் விடாமல் துரத்திய புலி




தேசிய பூங்காவில் உள்ள புலி ஒன்று தன்னை 4 கி.மீட்டர் தூரம் துரத்தியது குறித்த தனது சிலிர்ப்பான அனுபவத்தை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மும்பை நகர்ப் புறத்தில் புகழ்பெற்றது சஞ்சய் காந்தி தேசிய உயிரியல் பூங்கா. இங்கு சிங்கம், புலி உள்ளிட்ட ஏராளமான காட்டு விலங்குகள் இந்த பூங்காவில் சுதந்திரமாக திரியும்படி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு சிறப்பு வேன்களில் அமர்ந்து சவாரி செய்தவாறே புலி, சிங்கத்தின் நடமாட்டங்களை சுற்றலா பயணிகள் கண்டு மகிழலாம்.
இந்நிலையில், பூங்காவை சுற்றிப்பார்க்க சென்ற பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை புலி ஒன்று சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பின்தொடர்ந்து வந்துள்ளது.



இது குறித்து சமூக வளைத்தளமான டுவிட்டர், முகநூல் மற்றும் பிளாக்குகள் உள்ளிட்டவற்றில் தன் பயண அனுபவம் குறித்து அமிதாப்பச்சன் பதிவிட்டுள்ளார்.
மும்பை நகரின் இதயமாக விளங்கும் சஞ்சய் காந்தி தேசிய உயிரியல் பூங்கா. இந்த பூங்காவை சுற்றிப் பார்க்கச்சென்றேன். அங்கு சவாரிக்காக பயன்படுத்தப்படும் சிறப்பு வேனில் சென்றபோது ஒரு புலி என்னை பின்தொடர்ந்து வந்தது. சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு அது விடாமல் என்னை பின்தொடர்ந்து. இது வழக்கத்துக்கு மாறானது. என்னை புலி பின்தொடர்ந்து வந்தது சிலிர்ப்பான அனுபவம் என்று பச்சன் பதிவிட்டுள்ளார்.
மேலும், புலி தன்னை பின்தொடர்ந்து வரும் பல புகைப்படங்களையும் இணைய பக்கங்களில் பகிரிந்துள்ளார். அழிந்துவரும் புலி இனத்தை காப்பாற்ற சமூக ஆர்வலர்களும், அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருக்கின்றனர்.
அந்த வகையில் புலிகளை காக்கும் விளம்பர தூதராக அமிதாப் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையொட்டி நடந்த விழா ஒன்றில் கலந்துகொள்ள சென்றவர், அப்படியே பூங்கா ஊழியர்களுடன் சிறப்பு வேனில் வலம் வந்தார். அப்போதுதான் அவருக்கு இத்தகைய வியக்கத்தக்க அனுபவம் கிடைத்துள்ளது.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad