காம்பிளியைத் தொடர்ந்து வேலைக்கார சிறுமியை அடித்து உதைத்த வங்கதேச வீரர்!











வேலைக்கார சிறுமியை அடித்து உதைத்த வங்கதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹொசைனை பொலிசார் தேடி வருகின்றனர்.
டாக்காவில் உள்ள இவரது வீட்டில் 11 வயது சிறுமி வேலை செய்து வந்தார். அவரை ஷகாதத் ஹொசைன் மற்றும் அவரது மனைவி ரிட்டோ ஷகாதத் இருவரும் கொடுமைப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த சிறுமி காயத்துடன் அவரது வீட்டின் வெளியில் நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பொலிசார் விசாரித்ததில் ஷகாதத் அவருடைய மனைவியுடன் சேர்ந்து கொண்டு தன்னை தாக்கியதாக புகார் அளித்தார்.

இதனையடுத்து அந்த சிறுமி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அத்துடன் நேற்று பொலிசார் அவரது வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்த போது அவர்கள் வீட்டில் இல்லை.

இந்நிலையில் அவரை கண்டுபிடித்து கைது செய்யும் முயற்சியில் பொலிசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்பிளி தனது மனைவியுடன் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்தியதாக அவரது வீட்டில் வேலைப்பார்த்த பெண் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகாதத் ஹொசை மீதும் அதே போன்ற புகார் எழுந்துள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url