Type Here to Get Search Results !

கல்லூரி மாணவர்களுக்காக நடிப்புப் பயிற்சி பட்டறை- விஷால்- சுசீந்திரன் தொடங்கினர்!



கல்லூரி மாணவர்களுக்காக

நடிப்புப் பயிற்சி பட்டறை- விஷால்-

சுசீந்திரன் தொடங்கினர்!



சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கென நடிப்புப் பயிற்சிப் பட்டறை தொடங்கியுள்ளனர் நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் சுசீந்திரன்.





சுசீந்திரனும்-விஷாலும் இணைந்து ‘பாண்டியநாடு' படத்தில் பணியாற்றினர். அந்த படம் பெரிய வெற்றி பெறவே, தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் ‘பாயும் புலி' படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்கள். இந்தப் படம் செப்டம்பர் 4-ந் தேதி வெளியாகிறது.





சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய விஷால், பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொண்டார். மேலும், பல சமுக சேவை அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றவும் முடிவு செய்துள்ளார். மேலும் பசுமைச் சூழல் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கிடையே ஏற்படுத்தும் நோக்கத்தில் எம்.ஒ.பி கல்லூரியின் வளாகத்தில் ஆறு மரக் கன்றுகளையும் அவர் நட்டார்.



நானும் இயக்குனர் சுசீந்திரனும் இணைந்து இயக்கம் மற்றும் நடிப்புக்கான பயிற்சிப்பட்டறை ஒன்றை எம்.ஒ.பி கல்லூரி மாணவிகளுக்காக வழங்கவுள்ளோம்," என்றார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad