Type Here to Get Search Results !

புலி படம் வெளியாகும் நாளில் கத்துக்குட்டி வெளியாவது எதனால்? தயாரிப்பாளர்கள் விளக்கம்











நரேன் - சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில்   உருவாகி இருக்கும் 'கத்துக்குட்டி' திரைப்படம், வருகிற அக்டோபர் முதல் தேதி திரைக்கு வரவிருக்கிறது. விஜய் நடித்த புலி படமும் அதேதேதியில் வரவிருக்கிறது.பெரியநடிகரின் படம் வருகிற நாளன்று தங்கள் படத்தை வெளியிடுகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்பதைப் படக்குழுவினர் சொல்லியிருக்கிறார்கள். படத்தில் எந்த இடத்திலும் 'கட்' கொடுக்காமல் 'யு' சான்றிதழ் வழங்கி இருக்கும் தணிக்கை அதிகாரிகள், ''தஞ்சை மண்ணிலேயே வாழ்ந்த மாதிரியான மனநிலையை இயக்குநர் சரவணன் ஏற்படுத்திவிட்டார்" என மனமாரப் பாராட்டி இருக்கிறார்கள்.

தமிழக அரசின் வரிவிலக்கு குழு, படம் பார்த்த இரண்டாவது நாளே வரிவிலக்கு வழங்கி படக்குழுவைப் பாராட்டி இருக்கிறது. ''நூறு சதவிகித காமெடிப் படமாக 'கத்துக்குட்டி' உருவாகி இருந்தாலும், இன்றைய இளைய தலைமுறைக்கான மிக அவசியமான கருத்தையும் படத்தில் ஸ்ட்ராங்காக வலியுறுத்தி இருக்கிறோம். அதனால், படம் காந்தி ஜெயந்தியை ஒட்டி வெளிவந்தால் நன்றாக இருக்கும் எனத் திட்டமிட்டோம். 

நல்ல விஷயம் காந்தி ஜெயந்தியை ஒட்டி ரசிகர்களைச் சென்றடைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதே எங்கள் நோக்கம்" என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் மூவரும்.  அக்டோபர் முதல் தேதி தமிழகம் முழுக்க 240 திரை அரங்குகளில் 'கத்துக்குட்டி' வெளியாக இருக்கிறது. 






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad