Type Here to Get Search Results !

ரஜினியோடு நடிக்கமுடியவில்லையே, வருந்தும் பிரகாஷ்ராஜ்












ரஜினி நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் கபாலி. இப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்றுவருகிறது. இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க பிரகாஷ் ராஜை அணுகியபோது அவர் மறுத்துவிட்டார்.

இதுபற்றி பிரகாஷ் ராஜ் கூறும்போது, “ தொடர்ச்சியாக 60 நாட்கள் கேட்டதால் கொடுக்க முடியாமல் போய்விட்டது. ரஜினி சாரோடு படம் பண்ண வேண்டும் என ஆசை தான். ஆனால் 10 மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது எல்லாப் படங்களையும் பார்த்து பண்ண வேண்டியதாக இருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் பண்ணுவதால், மற்ற படங்களை விட்டுவிட்டு அதை மட்டுமே பண்ண வேண்டும். அதற்கான சூழல் இப்போது இல்லை.  'கபாலி'யில் பண்ண முடியவில்லை என்பதில் வருத்தம் தான்” என்று கூறியுள்ளார்.

ஆடுகளம், பொல்லாதவன் படங்களில் நடித்த கிஷோர் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார். பிரகாஷ்ராஜிக்கு பதிலாக தான் கிஷோர் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. ரஷ்யன் கல்சர் செண்டர், மற்றும் சென்னை இ.சி.ஆர் சாலைகளில் படப்பிடிப்பு நடந்துவருவதாக செல்லப்படுகிறது.

மேலும் இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், அட்டகத்தி தினேஷ், மைம் கோபி, ஜான் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துவருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad