நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!!!



நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!!!



விஜய் நடித்த ‘கத்தி’ படம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஜய் மற்றும் அப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

விஜய் நடித்து 2014 ல் வெளியான திரைப்படம் “கத்தி”. இன்னும் அந்தப் படம் தொடர்பான பிரச்சனை தீர்ந்தபாடில்லை. ஏற்கனவே தஞ்சாவூர் மாவட்டம் இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த அன்பு.ராஜசேகர் என்பவர், தான் “தாகபூமி” என்ற பெயரில் இயக்கிய குறும்படத்தை இயக்கி, அதன் கதையை முருகதாஸுக்கு
  அனுப்பியதாகவும், அதை முருகதாஸ் “கத்தி” என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துவிட்டதாகவும் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இப்போது அதே பிரச்சனைக்காக தஞ்சாவூர் நடுவன் நீதிமன்றத்தில் மேலும் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம், நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ், பட நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நீலகண்ட நாரயணபூர், ஒளிப்பதிவாளர் மற்றும் தயாரிப்பாளர்கள் என மொத்தம் 7 பேரும் அக்டோபர் 15ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என உத்திரவிடப்பட்டுள்ளது.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url