Type Here to Get Search Results !

ஒரு பெண்ணை எவ்வாறு பார்க்க வேண்டும்? ஆண்களே தெரிந்துகொள்ளுங்கள்










அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் மட்டுமே காதல் மலர்கிறது. காதல் என்று வந்துவிட்டாலே, உடனே காதலுக்கு கண் இல்லை என பலரும் சொல்வார்கள்.  ஆனால், காதலுக்கு கண் எவ்வளவு முக்கியம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்,  கண்ணோடு கண் பார்த்தல் என்பதே காதலுக்கு நல்லது.  ஆனால் இந்த பார்வையில் பெண்கள் சிலவற்றை விரும்புவார்கள்.  பெண்களின் பிற பாகங்களை ஆர்வமாகப் பார்ப்பது பெண்ணுக்கு கோபத்தை உண்டாக்கிவிடும்.  இயல்பாக பார்க்க வேண்டுமே தவிர, பார்வையிலேயே விழுங்கிவிடுவதைப் போல் ஆர்வம் காட்டக் கூடாது.  பார்வை நம் மீது இல்லாத நேரங்களிலும் நாகரீகமான பார்வை மட்டுமே காட்ட வேண்டும்.  பார்வையில் அன்பு தெரிய வேண்டும்.  பேச ஆரம்பிக்கலாமா என்பது போல அனுமதி கேட்கும் பாவனையில் உங்களது பார்வை அமைய வேண்டும்.  முதலில் நீங்கள் விரும்புபவரைப் பார்க்கும் போது, அவர் இன்று அழகாக இருப்பதை பாராட்டுவது போல் உங்கள் பார்வை இருக்க வேண்டும்.  பெண் சாதாரண பார்வை மூலமாகவே ஆணை காதலில் விழச் செய்துவிட முடியும்.  ஆனால் ஆண் பெண்ணை காதலில் விழச் செய்வது கொஞ்சம் சிரமமான விடயம் மட்டுமல்லாமல் கொஞ்சம் கூடுதலாகவே உழைக்க வேண்டியிருக்கும் என்பதுதான் உண்மை.








Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad