கழற்றிவிடப்பட்ட இஷாந்த் சர்மா: காரணம் என்ன?










 ரஞ்சிகோப்பை  கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி அணியில் இருந்து  வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த சர்மா நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த  இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சன்டிமாலுடன் தகராறில்  ஈடுபட்ட விவகாரத்தால் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை  விதிக்கப்பட்டுள்ள இஷாந்த் ஷர்மா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான  ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில்  சேர்க்கப்படவில்லை.  இந்நிலையில், நவம்பர் மாதம் நடைபெறும் தென்  ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக உள்ளூர்  போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கழற்றி  விடப்பட்டிருக்கிறார்.  இது குறித்து டெல்லி அணியின் தெரிவு குழு தலைவர்  வினய் லம்பா கூறுகையில், பலமுறை டெலிபோன் மூலம் இஷாந்த்  ஷர்மாவை தொடர்பு கொண்டோம். அவர் அழைப்பு எதனையும்  ஏற்கவில்லை. மேலும் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியும் பதில்  எதுவும் அளிக்கவில்லை. இதனால் கவுதம் கம்பீர் தலைமையிலான டெல்லி  அணியில் இஷாந்த் ஷர்மா இடம் பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url