நயன்தாரா மீது சிம்பு புகார் !


                                         சிம்பு, நயன்தாரா நடித்து வரும் இது நம்ம ஆளு படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் திட்டமிட்டபடி நடக்கவில்லை. இதனால் இயக்குனர் பாண்டிராஜ் படத்தை அப்படியே விட்டு விட்டு சூர்யா தயாரிப்பில் பசங்க 2 படத்தை எடுத்து முடித்து விட்டார். தற்போது விஷால் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். மீண்டும் படத்தை இயக்கி முடித்து தருமாறு பாண்டிராஜிடம் கேட்டதற்கு அவர் மறுத்து வந்தார். தற்போது ஒப்புக் கொண்டிருப்பதாக தெரிகிறது. ஒரு பாடல் காட்சியும், 3 வசன காட்சியும் மட்டுமே படமாக்கப்பட வேண்டியது இருக்கிறது. வாலு படப் பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும் நேரத்தில் தற்போது இது நம்ம ஆளு படத்தை முடித்து திரைக்கு கொண்டு வர சிம்பு முடிவு செய்துள்ளார். இதற்காக நயன்தாராவை படப்பிடிப்புக்கு அழைத்துள்ளார் சிம்பு. அதற்கு நயன்தாரா மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சிம்பு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளார். நடிகர் சங்கம் இதுகுறித்து நயன்தாராவிடம் விளக்கம் கேட்டதற்கு "நான் கொடுத்த தேதிகளை வீணாக்கி விட்டார்கள். நான் இப்போது வேறு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இனி அந்தப் படத்தில் நடிக்க முடியாது. முடிந்தால் என்னுடைய சம்பள பாக்கியை வாங்கிக் கொடுங்கள்" என்று கூறிவிட்டராம்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please pay me only 1 billion @9789103040 in my account so i can disable all my ads ..I know you can't so disable the adblock !!.. : )