அஜித்தை இயக்க போகிறார் ராஜமெளலி.!


                                           பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் ராஜமெளலி. இந்திய அளவில் அதிக வசூலை குவித்த படமாக பாகுபலி தற்போது திகழ்கிறது. ஒரு மாதமாகியும் வசூல் குறையாத சக்கரவர்த்தியாக பாகுபலி இருக்கிறது. பாகுபலி படத்திற்கு பின்னர் கோலிவுட்டிலிருந்து, பாலிவுட் நடிகர்கள் வரை பலரும் ராஜமெளலி இயக்கத்தில் நடிக்க ஆவலாய் இருந்து வருகின்றனர். ஆனால் ராஜமெளலியோ நடிகர் அஜித்தை இயக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். சமீபத்தில், பாகுபலி படம் தொடர்பாக சென்னை வந்திருந்த ராஜமெளலி, அஜித்தை பற்றி புகழ்ந்து பேசினார். அதுமட்டுமின்றி சென்னை வந்தபோது அஜித்தையும் சந்தித்தாக கூறப்படுகிறது. மேலும் ராஜமெளலியின் தந்தையும், பாகுபலி, பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ராஜமெளலி என்னிடம் ஒரு யதார்த்தமான, சமூக கருத்துள்ள படம் ஒன்றை இயக்க வேண்டும் என்றும், அந்தப்படத்தை அஜித் மற்றும் அல்லு அர்ஜூனை கொண்டு இயக்க வேண்டும் என்று தமது விருப்பத்தை கூறியதாக அவர் கூறியுள்ளார். இவை எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் போது விரைவில், அஜித் வைத்து ராஜமெளலி படம் இயக்குவார் என தெரிகிறது. அப்படி உருவாகும் இந்தப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் என தெரிகிறது. தற்போது பாகுபலி-2 பட வேலைகளை துவங்கியிருக்கும் ராஜமெளலி, அடுத்தப்படியாக மகேஷ் பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படங்களை எல்லாம் முடித்த பின்னர் அஜித் படத்தை இயக்குவார் என தெரிகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url