கூந்தல் அழகுக் குறிப்புகள்





கூந்தல் அழகுக் குறிப்புகள்





கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை     ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும். தலையில்   தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான ஹேர்   ஆயில்கள் இன்று இருக்கின்றன. இந்த ஹேர் ஆயில்களெல்லாம் தலைமுடியின் ஆயுளைக் குறைத்து விடுகின்றன. சுத்தமான நல்லெண்ணெயையும் சுத்தமான தேங்காயெண்ணையும் தவிர வேறு எதையும்            தலையில் படவிடக் கூடாது.




சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும்.





தலைமுடி வறண்டுசீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப் பொலிவும் குறையும்ஆகவே          மறுநாள் காலையில் விழா என்றால் முதல் நாள் 
இரவில் கூந்தலை சீராக்குவது அவசியம்முதல் நாள் மாலையில் கூந்தலை எப்போதும் போல் ஷாம்பு மற்றும் சீயக்காய் வைத்து அலசி விடவும்.

அடுத்தநாள் கூந்தலை அலசிதுடைத்து விட்டு அலங்காரம் செய்தால் கூந்தல் பளிச்சென இருக்கும்முகமும் தோற்றப் பொலிவுடன் அனைவரையும் கவரும்அழகு நிலையங்களுக்கு சென்று தலை முடியை கலரிங் செய்து விட்டுஷாம்பு மூலம் சுத்தம் செய்யும் போது கூந்தலில் உள்ள சில சத்துக்கள் அழிந்து போகும்இதற்கு வீட்டில் ஷாம்பு போட்டு முடித்த பின்னர்தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலக்கி கூந்தலை கழுவி அலசவும்இதனால் கூந்தல் பளபளப்பாகும்.












Next Post Previous Post
No Comment
Add Comment
comment url