Type Here to Get Search Results !

ஹரியின் சிங்கம்-3...தொடக்கம் !



                                                    டைரக்டர் ஹரியைப் பொறுத்தவரை தனது கதைகளுக்கு மட்டுமின்றி, வேலையில் தனக்கு ஈடு கொடுத்து செல்லக்கூடிய நடிகர்கள், டெக்னீசியன்களை விடாமல் தொடர்ந்து தனது படங்களுக்கு பயன்படுத்தி வருவார். அந்த வகையில், சூர்யாவை வைத்து ஆறு என்ற படத்தை முதன்முதலாக இயக்கினார். அந்த படத்தில் அவரது ஒர்க்கை பார்த்தவர் அடுத்தபடியாக வேல், சிங்கம், சிங்கம் 2, ஆகிய படங்களிலும் நடிக்க வைத்தவர், இப்போது சிங்கம்-3 படத்தையும் அவரை வைத்தே இயக்கவிருக்கிறார். மாஸ் படத்தை அடுத்து 24 படத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா, இந்த மாதத்தோடு அந்த படத்தில் நடித்து முடித்து விடுவாராம். அதனால் செப்டம்பரில் இருந்து தனது சிங்கம்-3 படத்தை தொடங்குகிறார் ஹரி. மேலும், தனது முந்தைய படங்களான சாமி, வேல், சிங்கம், சிங்கம்-2 உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ப்ரியனையே சிங்கம்-3 படத்திற்கும் ஒளிப்பதிவாளராக நியமித்திருக்கிறார் ஹரி. எப்போதும் தான் ஒளிப்பதிவு செய்யும் படங்களின் கதை விவாதத்திலும் கலந்து கொள்ளும் ப்ரியன், இந்த சிங்கம்-3 படத்தின் கதை விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, சிங்கம்-2 படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் ஒர்க் பண்ணவில்லையாம். ஹரியைப் போலவே அவரும் சிங்கம்-3 படப்பிடிப்புக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad