Type Here to Get Search Results !

சூர்யாவிடம் மன்னிப்பு கேட்ட சிம்பு!



                                                      நடிகர் சூர்யாவுக்கு நேற்று பிறந்தநாள். வழக்கமாக தன் பிறந்தநாளை தன்னுடைய குடும்பத்தினருடனும் நெருக்கமான நண்பர்களுடன் மட்டும் கொண்டாடுபவர் சூர்யா. இந்த வருடம் வழக்கத்தைவிட சற்று விமரிசையாகக் கொண்டாட எண்ணினாராம் சூர்யா. அதற்கு ஜோதிகா மீண்டும் நடிக்க வந்ததும் முக்கியமான ஒரு காரணம் என்கிறார்கள். ஜோதிகா நடிப்பைவிட்டு விலகியிருந்தபோது சினிமா நடிகர் நடிகைகளை பார்ட்டிக்கு அழைப்பதில் உடன்பாடு இல்லாமல் இருந்தாராம். இப்போது ஜோதிகாவும் மீண்டும் நடிக்க வந்ததால் தன்னுடைய பிறந்த நாள் பார்ட்டிக்கு அனைவரையும் அழைக்க முடிவு செய்தாராம். தனக்கு நண்பராக உள்ள சில ஹீரோக்களை மட்டும் அழைத்தாராம் சூர்யா. அவரது அழைப்பை ஏற்று சில ஹீரோக்கள் வருகை தந்துள்ளனர். சிம்புவுக்கு அழைப்பு விடுத்தும் அவர் வரவே இல்லையாம். இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வராதது குறித்து, ட்விட்டரில் சூர்யாவிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் சிம்பு. கூடவே ஷூட்டிங் இருந்ததால் என்னால் வர முடியவில்லை. வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad