Type Here to Get Search Results !

அஜித் பாணியில் ஜோதிகா!



                                        எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்த படம் வாலி. சிம்ரன் நாயகியாக நடித்த அந்த படத்தில்தான் ஜோதிகா தமிழுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற, சோனா ஓ சோனா ஐ லவ்யூ லவ்யூடா.... என்ற பாடல் அப்போது பிரபலம் என்பதால் அந்த பாடலே ஜோதிகாவை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது. அதையடுத்து சூர்யா, விஜய் என அனைத்து மேல்தட்டு ஹீரோக்களுடனும் நடிக்கத் தொடங்கிய ஜோதிகா, ஒரு கட்டத்தில் கமல், ரஜினி என தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். பின்னர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பை விட்டு முற்றிலுமாக விலகியவர், 36 வயதினிலே படம் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். அந்த படத்தில் நடித்து வந்தபோது, யூனிட்டில் இருந்த அனைத்து நடிகர் நடிகைகளிடமும் மிக இயல்பாக பழகினாராம் ஜோதிகா. முன்னணி நடிகை என்று அவரை கண்டு ஒதுங்கிய நின்றவர்களெல்லாம் அவரது எளிமையைக்கண்டு நெருங்கி வந்து சகஜமாக பழகினார்களாம். அதோடு, எப்படி அஜித்குமார், தனக்கான காட்சிகள் முடிந்ததும் கேரவனுக்குள் சென்று ஓய்வெடுக்காமல் படப்பிடிப்பு தளத்திலேயே அமர்ந்து மற்றவர்கள் நடிப்பை ரசித்துக்கொண்டிருப்பாரோ, அதேபோன்று 36 வயதினிலே படப்பிடிப்பின்போது ஜோதிகாவும் படப்பிடிப்பு தளத்தில் ஒரு சேர் போட்டு உட்கார்ந்து மற்றவர்களின் நடிப்பை ரசித்தாராம். அவர்கள் சிறப்பான பர்பாமென்ஸ் கொடுக்கிறபோது கைதட்டி ஆரவாரம் செய்தாராம். அதை அப்படத்தின் பணியாற்றியவர்கள் இப்போதுவரை பெருமையாக சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad