Type Here to Get Search Results !

வாலு படம் ஜூலை 31 அன்று ரிலீஸ் !





                                           சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் உருவான வாலு படம் நாளை (ஜூலை 17- ஆம் தேதி) வெளியாவிருந்தது. கடந்த மூன்று வருடங்களாக சுமார் 15 தடவைக்கு மேல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும்  ரிலீஸ் ஆகவில்லை. அதனால் விரக்தியடைந்த சிம்பு தன் அப்பாவிடம் சொல்லி சிம்பு சினி ஆர்ட்ஸ் பேனரில் வாலு படத்தை வெளியிட வேண்டினார். அதன்படி களத்தில் இறங்கிய டி.ராஜேந்தர் வாலு படத்தை வெளியிட தடையாக இருந்த விவகாரங்களை பேசித்தீர்க்கும் முயற்சியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டிருந்தார் டி.ராஜேந்தர். இந்நிலையில், மேஜிக் ரேஸ் நிறுவனம் சார்பில் வாலு படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  மேஜிக் ரேஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் வாலு படத்தை வெளியிட தடை விதித்தது நீதிமன்றம். நீதிமன்றத்தின் இந்த உத்தரவால்  நாளை வாலு படம் வெளியாகவில்லை. இதற்கிடையில் வாலு படத்துக்கு தடைவிதிக்கும்படி, மேலும் 6 பேர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.  இந்த 6 வழக்குகளும் விரைவில் விசாரணைக்கு வரவிருக்கின்றன. இதற்கிடையில் மேஜிக் ரேஸ் கேட்ட 10 கோடியைக் கொடுத்து செட்டில்மெண்ட் செய்வது என்றும், அதன் அடிப்படையில் வழக்கை வாபஸ் வாங்க வைப்பது என்றும் அவுட் ஆஃப் கோர்ட் செட்டில்மெண்ட் செய்ய பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். இந்த சமரச முயற்சி வொர்க் அவுட்டானால் இம்மாதம் 31ம் தேதி அன்று வாலு படத்தை வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad