Type Here to Get Search Results !

பெங்களூருவில் தெற்காசிய கூடைப்பந்து






                                தெற்காசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் அடுத்த மாதம் (ஜூலை) 3–ந் தேதி முதல் 5–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. ஜப்பான் லீக் ஆட்டத்தில் பங்கேற்று இருக்கும் அம்ஜோத்சிங் கில், அம்ரித்பால் சிங் மற்றும் என்.பி.ஏ. போட்டியில் ஆட முடிவு செய்து இருக்கும் சத்னம் சிங் பாம்ரா ஆகியோர் தவிர எஞ்சிய வீரர்கள் அனைவரும் முகாமில் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டி ஆசிய சாம்பியன் ஷிப் போட்டிக்கான தகுதி சுற்றாகும். கடந்த ஆண்டு காத்மாண்டுவில் நடந்த தெற்காசிய போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad