Type Here to Get Search Results !

தோனி, கோலிக்கு லீவு : இந்திய அணியின் புதிய கேப்டன் அஜிங்கிய ரஹானே!





                                               ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு அஜிங்கிய ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி, ஜுலை மாதம் ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதுடன், 2 டி 20 போட்டிகளிலும் விளையாடுகிறது. இந்நிலையில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் தோனி, துணை கேப்டன் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

                                               மேலும் அஸ்வின், ரோகித் சர்மா, உமேஷ் யாதவ், ஷிகர் தவான் ஆகியோருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான போட்டிகளை அடுத்து முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதே வேளையில் மூத்த வீரரான ஹர்பஜன் சிங்கிற்கு அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது. இதற்கு முன் ரஹானே இந்திய அணிக்கு ஒரு டி 20 உள்பட இரு ஆட்டங்களுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். அந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளர்.


                                            அஜிங்கிய ரஹானே, முரளி விஜய், அம்பாத்தி ராயுடு, மனோஜ், கேதார் ஜாதவ், ராபின் உத்தப்பா, மணீஷ், ஹர்பஜன் சிங்,அக்ஷார் பட்டேல், கார்ன் ஷர்மா, தவால் குல்கர்னி,பின்னி, புவனேஷ்வர், மோகித் சர்மா, சந்தீப் ஆகியோர் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad