Type Here to Get Search Results !

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : சானியா மிர்சா ஜோடி காலிறுதியில்,பயஸ் ஜோடி இறுதியில் வெளியேறியது

                 




              பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பாரிஸ்-ல் நடைபெற்று வருகிறது.இதில் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ,மார்டினா  ஹின்கிஸ் ஜோடி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலிய ஜோடியான கரின் நாப் ,ராபர்டா நாப் ஜோடியை எதிர்கொண்டது.இதில் ஆட்டம் முழுக்க மிர்சா ஜோடியின் கைவசம் இருந்தது.

    முதல் செட்டை சானியா -ஹின்கிஸ் ஜோடி  6-1 என்ற கணக்கில்  கைப்பற்றியது. இரண்டாவது சுற்றில் நாப் சகோதரர்கள்  ஆக்ரோஷமாக விளையாடினாலும் ,இந்திய ஜோடி அவர்களுக்கு சவாலாக திகழ்ந்தனர்.இறுதியாக சானியா ஜோடி 6-4 என்ற கணக்கில் நாப் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. 

         இரட்டையர் ஆடவர்க்கான மற்றொரு  ஆட்டத்தில் பயஸ் ஜோடி இத்தாலிய ஜோடியிடம் வீழ்ந்தது.தொடக்கத்திலிருந்தே சறுக்கலுடன் ஆடிய பயஸ் ஜோடி இரண்டாவது செட்டை 6-2 என்ற கணக்கில் தோற்றது.இந்த ஜோடி நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை .இறுதியில் இத்தாலிய ஜோடி போலேலி-போக்னினி வீரர்கள்  காலிறுதிக்குள் நுழைந்தனர் .பயஸ் ஜோடி தவறான ஷார்ட்களை ஆடியதால் காலிறுதி வாய்ப்பு கிடைக்கவில்லை.



By Kathiresan
                                

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad