Type Here to Get Search Results !

இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆட்டம் மழையால் பாதிப்பு .தவான் அரை சதம் அடித்தார்.



     

       இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளும் நேருக்கு நேர் ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர்.அதில் இந்தியா 6-ல் வெற்றியும்,ஒரு போட்டி முடிவில்லாமலும் போனது .இருப்பினும் பங்களாதேஷ் அணியை குறைத்து மதிப்பிட முடியாது.ஆசியக் கோப்பை ,உலகக் கோப்பையில் காலிறுதிக்குத் தகுதி  மற்றும் தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளை வென்றுள்ளது.இருப்பினும் இந்தியாவும் இந்த உலகக் கோப்பையில் அரையிறுதி வரை சென்றுள்ளது.இரு அணிகளும் நல்ல பார்ம்-ல் உள்ளன.

      இந்நிலையில் பங்களாதேஷ் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில்,முதல் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டது.இந்த ஆட்டத்தில் தவான்-விஜய் ஜோடி விக்கெட் இழப்பின்றி 23.3 ஓவர்களில் 107/0 என்ற நல்ல தொடக்கத்தை இந்தியாவிற்கு அமைத்துக் கொடுத்தனர்.தவான் 74 ரன்களுடனும் ,விஜய் 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad