Type Here to Get Search Results !

ஓட்டல் நெருக்கடி: வீரர்கள் அதிருப்தி











                                                 இந்திய வீரர்கள் தாகாவில் உள்ள பான் பசிபிக் ஓட்டலில் தங்கியுள்ளனர். வங்கதேசம் சென்ற போது பிரதமர் மோடி கூட இங்கு தான் தங்கினார். இங்கு பெரிதாக பிரச்னை இல்லை என்றாலும் ஓட்டலுக்கு வெளியே நெருக்கடியாக உள்ளதாம். வீரர்கள் வெளியே சென்று வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

                                                          கிரிக்கெட் ஆர்வம் நிறைந்த ரசிகர்கள் அதிகமாக இருப்பதால், பாதுகாப்பு படை வீரர்கள் துணையின்றி வெளியே கால் வைக்க முடிவதில்லை. இதனால் பதுல்லா டெஸ்ட் முடிந்ததும் வேறு ஓட்டலுக்கு மாற்றும்படி இந்திய அணி நிர்வாகம் கேட்டது.

                                                          ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இதனை ஏற்க வங்கதேச கிரிக்கெட் போர்டு மறுத்து விட்டது. இதனால் இந்திய வீரர்கள், வரும் 24ம் தேதி வரை பான் பசிபிக் ஓட்டலிலேயே தங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad