சச்சின் ரசிகரை சரமாரியாக தாக்கிய வங்கதேச வெறி வெறியர்கள் !....




                                                     இந்தியாவை அடுத்தடுத்து 2 போட்டிகளில் வீழ்த்தி தொடரையும் வென்ற வங்கதேச அணியின் வெற்றி களிப்பில் இருந்த வங்கதேச கிரிக்கெட்  ரசிகர்கள், இந்திய ரசிகர் ஒருவரை சரமாரியாக அடித்து வெறித்தனமாக நடந்து கொண்டுள்ளனர். தாக்கப்பட்ட ரசிகர், உலகம் முழுவதும் பிரபலமான  இந்திய ரசிகர் சுதிர் கெளதம் ஆவார்.  இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் கூட பாராட்டிப் புகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2வது ஒரு  நாள் போட்டியில் நேற்று இந்திய அணி வங்க தேசதங்திம் தேர்லியடைந்தது.

                                                     இதையடுத்து வங்கதேச ரசிகர்கள் வெறித்தனமாக நடந்து கொண்டனர். அப்போதுதான் சுதிர் கெளதம் தாக்கப்பட்டார். இந்திய தேசியக் கொடியை  ஆட்டியபடி போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார். போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததும் வங்கதேச ரசிகர்கள் கொண்டாட்டத்தில் குதித்தனர்.  அப்போது ஸ்டேடியத்தை விட்டு வெளியே வந்த கெளதம் ஒரு ஆட்டோவில் ஏறி தனது இருப்பிடம் செல்ல முயன்றார். அவரைப் பார்த்த ரசிகர்கள்,  அவரை தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கினர்.



                                                              சிலர் கெளதம் மீது கல்வீசியும் தாக்கியுள்ளனர். உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோற்றதற்குத் தாங்கள் பழிக்குப் பழிக்குத்  தீர்த்து விட்டதாகவும் கூச்சலிட்டனர். உடல் முழுவதும் மூவண்ண பெயிண்ட் அடித்துக் காணப்பட்ட கெளதம் கூறுகையில், இதுவரை இப்படிப்பட்ட  ஒரு நிலையை நான் எங்கும் கண்டதில்லை என்று கூறடிய அவர் என்னை 2 போலீஸார் வந்து காப்பாற்றினர் என்றார். 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url