Type Here to Get Search Results !

ரோஜாவுக்கு மருத்துவ குணமும் உண்டு





ரோஜாவுக்கு மருத்துவ குணமும் உண்டு 


             ரோஜா மலர் அழகானது,  அன்பை வெளிப்படுத்த உதவுவது என்பதோடு,

அனேக மருத்துவ குணங்களையும் கொண்டது.

          ரோஜா மலர் லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள

வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரக்கூடியது.  இதயத்துக்கு வலுவூட்டும்

  இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும்.

                     ரோஜா மலரின் இதழ்களை வேளைக்கு ஒருகைப்பிடி வீதம்

அப்படியே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

            ரோஜா இதழ்களை தேவையான அளவு எடுத்துக் கொண்டு,  சம அளவு

பயத்தம்பயிரை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதனை தினமும் உடலில் தேய்த்து அரை மணி கழித்து குளித்து வந்தால்

சரும நோய்கள் ஒழிந்து  உடல் நல்ல நிறம் பெரும்.

        ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒரு கையளவு இதழை ஒரு

பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி

வடிகட்டி, அதில் பாதி கசாயத்தை எடுத்துச் சர்க்கரை சேர்த்து காலையிலும் ,

மறுபாதியை  மாலையிலும் குடித்து வந்தால் மலச்சிக்கல் விலகும்.        

         
          

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad