Type Here to Get Search Results !

புதுபடத்தில் ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா

புதுபடத்தில் ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா





ரஜினி ‘லிங்கா’ ரிலீசுக்கு பிறகு ஓய்வு எடுத்து வந்தார். சமீபத்தில் புதுப்படத்தில் நடிப்பதற்கு கதைகள் கேட்டார். அப்போது இயக்குனர் ரஞ்சித் சொன்ன கதை அவருக்கு பிடித்து போனது.
இவர் கார்த்தி நடித்த ‘மெட்ராஸ்’ படத்தை டைரக்டு செய்து பிரபலமானவர். இந்த படம் சிறப்பாக இருந்ததாக அனைத்து தரப்பினர் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அத்துடன் அட்டகத்தி என்ற படத்தையும் எடுத்து இருந்தார்.
முன்னணி இயக்குனர்களான ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிக்குமார் போன்றோரில் ஒருவர்தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவார் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஷங்கர் எந்திரன் 2–ம் பாகத்தை ரஜினியை வைத்து எடுக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் ரஜினி திடீரென புது இயக்குனர் ரஞ்சித் கதையை தேர்வு செய்து அந்த படத்தில் நடிக்க முன்வந்தது திரையுலகினர் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. ரஞ்சித் திரைக்கதையை மேலும் சிறப்பாக செதுக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். கதை விவாதம் இரவு பகலாக நடக்கிறது. அடுத்த மாதம் படப்பிடிப்புக்கு செல்ல திட்டமிட்டு உள்ளார்.
இந்த படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்க நயன்தாராவை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‘சந்திரமுகி’ படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து உள்ளனர். ‘சிவாஜி’ படத்திலும் ஒரு பாட்டுக்கு சேர்ந்து நடனம் ஆடியுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad